Chennai Super league | சென்னையை மீண்டும் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது கோவா

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.



சென்னையின் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவாவை சந்தித்தது.



ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் கோவா அணியின் அஹமது ஜாவோ ஒரு கோலும், பிராண்டன் பெமண்டிஸ் 41-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். தொடர்ந்து, 46வது நிமிடத்தில் ஹியூகோ பவ்மஸ் ஒரு கோல் அடித்தார்.


இதனால் முதல் பாதி முடிவில் கோவா அணி 3-0 என முன்னிலை வகித்தது.


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை அணியின் ஆண்ட்ரி செம்பிரி 57-வது நிமிடத்திலும், ரபெல் கிரிவல்லாரோ 59-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

கோவா அணியின் பெரான் கரோமினாஸ் 63வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் கோவா அணி 4-2 என முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் இறுதியில் 91-வது நிமிடத்தில் சென்னை அணியின் ரபெல் கிரிவல்லாரோ மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், கோவா அணி 4-3 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப் சி அணியை மீண்டும் வீழ்த்தியது. இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கோவா அணி முதலிடம் பிடித்துள்ளது.

Comments

Popular posts from this blog

Rajasthan BSTC Admit Card 2020 : राजस्थान प्री डीएलएड के एडमिट कार्ड जारी, ये रहा Direct Link

Dawood Ibrahim की कथित गर्लफ्रेंड Mehwish Hayat ने बॉलीवुड पर लगाया था बड़ा आरोप

Salman Khan के फैंस को ट्विटर पर ख़ूब धो रहे हैं सिंगर-म्यूज़िशियन अमाल मलिक, जानिए वजह